Sunday 28 July 2019

அவளுக்குள் ஆயிரம் வருத்தங்கள்....



வெள்ளைநிற குளத்திற்குள்
கரியநிற வைரமொன்று
கருநிறக் காவலாளிகளால்
பூட்டு இல்லாக் கதவுகொண்டு மூடப்படுகிறது...!!

காலத்தின் கோலத்தில்
சிதைந்த சிறுநெஞ்சின்
சிந்தனைத்  துளியில்,
கதவும் மூடியிருக்க
காவலர்களும் காவலிருக்க
கரைபுரண்டோடுதம்மா கங்கை வெள்ளம்
கன்னியவளின் கன்னத்தில் ..!

நன்றி,
ஊமை இளைஞன்  

No comments:

Post a Comment