Friday 19 July 2019

மழை தருவாய் மழையே




ஆறும் வறண்டிருக்கு
அணையும் தவம்கிடக்கு
அருள்புரிவாயே அன்பு மழையே..!!

குளமும் வெறும் குழியாகிடக்கு
குட்டை கிணறும் கல்லாகிடக்கு
கோவம் வேண்டாம் கொள்ளை மழையே!

ஓடையும் ஒழிஞ்சுகிடக்கு
ஊரணியும் உருகிக்கிடக்கு
ஓடி வா உன்னத மழையே

மண்ணும் காய்ஞ்சுகிடக்கு
மக்க மனசும் மருண்டுகிடக்கு
மவுனம் வேண்டாம் மழழை மழையே!

உடம்போ வேர்த்துக்கிடக்கு
உசுரோ காத்து கிடக்கு
இரக்கம் கொள்வாய் இன்ப மழையே!

ஊற்றும் உறங்கிக்கிடக்கு
நாத்தும் நசுங்கி கிடக்கு
கீழிறங்கி வா! கிளை தழைக்க வா!
உயிர் பிழைக்க வா! உறவாக வா!

நன்றி,
ஊமை இளைஞன்

No comments:

Post a Comment