Thursday 25 July 2019

கோபம் வேண்டாம் கொள்ளைபோகிறேன்........



இளவேனிற் காலத்தில்
இதயத்தில் முளைத்தவளே!

உந்தன் கோபக்கனலில்,
உதிரமெல்லாம் உறைந்துபோகிறேன்!

உந்தன் வெள்ளி பார்வையில்
வெடவெடுத்துப் போகிறேன்!

உந்தன் சுட்டுவிழிப் பார்வையில்
எந்தன் தேகம்சுட்டு சாய்கிறேன்!

என்னவளே,

இரக்கம் கொள்,
இமைகளால் கொல்லாதே!

பற்றிக்கொள்,
பார்வையால் தள்ளாதே!

நன்றி,
ஊமை இளைஞன்

No comments:

Post a Comment